ஏட்டிக்கு போட்டி: ஜெயலட்சுமி மீது பணமோசடி வழக்கு

Subscribe to Oneindia Tamil

மதுரை:

தன்னைக் கொல்ல முயன்றதாக வழக்கறிஞர் மீது ஜெயலட்சுமி புகார் கொடுத்ததைடுத்து, ஜெயலட்சுமி மீது வழக்கறிஞர் பணமோசடி புகார் கொடுத்துள்ளார்.

இதன் பேரில் ஜெயலட்சுமி மீது மதுரை எஸ்.எஸ்.காலனி போலீஸார் பண மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஜெயலட்சுமி விவகாரத்தை வெளிஉலகுக்கு கொண்டு வந்ததில் பெரும் பங்கு வழக்கறிஞர் அழகர்சாமிக்கு உண்டு. ஆனால்இருவருக்கும் இடையே தற்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஜெயலட்சுமியின் வழக்கில் தற்போது வழக்கறிஞர்களான வெங்கடேசன், ஓம்சேர்மபிரபு ஆகியோர் ஆஜராகிவருகின்றனர்.

இந் நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கறிஞர் அழகர்சாமி தன்னை வீடுபுகுந்து கழுத்தை நெரித்து கொலை செய்யமுயன்றதாக ஜெயலட்சுமி மதுரை எஸ்.எஸ். காலனி போலீஸில் புகார் கொடுத்தார்.

அழகர்சாமியின் தாக்குதலில் காயமடைந்த ஜெயலட்சுமி மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குஅவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நடந்த சம்பவம் குறித்து ஜெயலட்சுமி கூறுகையில், எனது எதிராளிகளான ஏட்டு கண்ணன் ஆகியோரிடம் எனக்குத் தெரியாமல்அழகர்சாமி ரகசியமாக தொடர்பு வைத்திருந்தது தெரியவந்தது.

இரண்டு பேரிடம் பணமும் அவர் வாங்கியுள்ளார். உடனே அவரை அழைத்து எனது வழக்கை நீங்கள் நடத்த வேண்டாம் என்றுகூறிவிட்டேன். அவர் என்னிடம், உன்னை நம்பி பல பேரிடம் பணம் வாங்கியுள்ளேன் என்று கூறி என்னிடம் பேரம் பேசினார்.அதற்கு நான் மறுத்து விட்டேன்.

இதனால் ஆத்திரமடைந்த அழகர்சாமி என்னுடைய வீட்டுக்கு இரவில் வந்து என்னை கழுத்தை நெரித்துக் கொல்ல முயன்றார்.இந்த தாக்குதலுக்கு எனது பாதுகாப்புக்கு இருந்த போலீஸாரே உடந்தையாக இருந்துள்ளனர்.

அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வேறு போலீசாரை நியமிக்க வேண்டும், இல்லாவிட்டால் எனக்கு இனிமேல்போலீஸ் பாதுகாப்பே தேவையில்லை. நடந்த சம்பவம் குறித்து போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுக்க உள்ளேன் என்றார்.

இதற்கிடையே தன்னுடைய பணம், நகைகளை ஜெயலட்சுமி பறித்துக் கொண்டதாக வழக்கறிஞர் அழகர் சாமி காவல் நிலையத்தில்புகார் கொடுத்துள்ளார். அதில்,

வழக்கு செலவுக்காகவும் ஜெயலட்சுமியின் செலவுக்காகவும் நகை, பணத்தை நான் கொடுத்தேன். அதை நான் திருப்பிக்கேட்டபோது அவரை நான் கொல்ல முயன்றதாக பொய் புகார் கொடுத்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தப் புகாரின்பேரில் மதுரை எஸ்.எஸ். காலனி போலீசார் ஜெயலட்சுமி மீது பண மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே வழக்கறிஞர் அழகர்சாமி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் முன் ஜாமீன் கோரி மனு கொடுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+