டீக் கடைக்குள் புகுந்த வேன்: 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே சாலையோர டீ கடைக்குள் வேன் புகுந்ததில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
மண்டபம் அருகே தேவாலை என்ற இடத்தில் சாலையோர டீக் கடையில் ஏராளமான பேர் டீ சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.அப்போது வேன் ஒன்று படு வேகமாக வந்து டீக் கடை மீது மோதியது.
இதில் டீ சாப்பிட்டுக் கொண்டிருந்த மண்டபத்தைச் சேர்ந்த அலாவுதீன், பாம்பன் பகுதியைச் சேர்ந்த சண்முகம் ஆகிய இருவரும்சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். 4 பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வேன் டிரைவரை போலீஸார் கைதுசெய்தனர்.












Click it and Unblock the Notifications