தமிழக தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையர் தகவல்

Subscribe to Oneindia Tamil

சேலம்:

போட்டோவுடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி தமிழகத்தில் செப்டம்பர் மாதம் துவங்குகிறது என்று தலைமைதேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்தார்.

கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய 4 மாநகராட்சிகளுக்கு உட்பட்ட சட்டசபைகளில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல்திருத்தம் செய்யும் பணி குறித்த ஆய்வுக் கூட்டம் சேலத்தில் நடந்தது.

இக் கூட்டத்தில் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா மற்றும் தேர்தல் அதிகாரிகள் செந்தில் குமார், பிரகதா, கலெக்டர்சுகுமாரன் உட்பட பல அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதன் பின்னர் நரேஷ் குப்தா நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருநெல்வேலி மற்றும்திருச்சி ஆகிய 6 மாநகராட்சிகளுக்கு உட்பட்ட 38 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணிநடந்து வருகிறது.

வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணியில் வரையறுக்கப்பட்ட கால அட்டவணைப்படி பணியை முடிக்க வேண்டும்.இந்தப் பணிக்கு இன்னும் கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணிகுறித்து தேர்தல் ஆணையம் அறிவிக்கும்.

வாக்காளர் போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை தயாரிக்கும் பணி செப்டம்பர் மாதம் துவங்க உள்ளது. காஞ்சிபுரம்,கும்மிடிப்பூண்டி சட்டசபை தொகுதிகளுக்கு நவம்பர் மாதம் இடைத்தேர்தல் நடைபெறும்.

தமிழகத்துக்கு எப்போது தேர்தல் நடக்கும் என்பது குறித்து நான் கருத்து எதுவும் சொல்லக்கூடாது. அதை சொல்வதற்கு நான்ஜோதிடர் அல்ல. தேர்தல் ஆணையம் தான் அதை அறிவிக்கும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+