நண்பர் கொலை: 2 பேருக்கு 36ஆண்டு சிறை

Subscribe to Oneindia Tamil

சேலம்:

நண்பரைக் கொன்ற வழக்கில் 2 பேருக்கு சேலம் விரைவு நீதிமன்றம் 36 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்துத்தீர்ப்பளித்துள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்தவர் ரகு. அதே பகுதியைச் சேர்ந்த சங்கர், நரேஷ்குமார், செந்தில்குமார் உள்ளிட்ட 5 பேர்அவரது நண்பர்கள்.

கடந்த 2002ம் ஆண்டு, மேட்டூர் மதுரை வீரன் கோவில் அருகே 6 பேரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போதுஅவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ரகுவை, மற்ற 5 பேரும் சேர்ந்து பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொலை செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு சேலம் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் இன்று நீதிபதி முகம்மது அலி தீர்ப்பளித்தார். சங்கர்மற்றும் நரேஷ்குமார் ஆகிய இருவருக்கும் 36 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தும்,

மற்ற 3 பேரும் சிறுவர்களாக இருப்பதால் அவர்களை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்குமாறும் நீதிபதி தனது உத்தரவில்கூறியிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+