மாமல்லபுரத்தில் மேலும் 2 கோவில்கள் கண்டுபிடிப்பு!
சென்னை:
மாமல்லபுரத்தில் மேலும் 2 பழங்கால கோவில்களை அகழ்வாராய்ச்சி நிறுவனத்தினர் கண்டுபிடித்துள்ளனர்.
சமீபத்திய சுனாமி தாக்குதலுக்குப் பிறகு, மாமல்லபுரம் கடற்கரைப் பகுதியில் மணலில் புதைந்து கிடந்த சில கட்டிடங்கள்வெளியே தெரிந்தன. இதைத் தொடர்ந்து அப்பகுதியில் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சித் துறையினர், அகழ்வாராய்ச்சியில்ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த தொல்பொருள் ஆராய்ச்சித் துறையைச் சேர்ந்த பாபு ராஜீவ் கூறுகையில்,சமீபத்திய ஆய்வில், கடல் சுவர், தூண்கள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் 2 பழங்காலக் கோவில்கள் உள்ளேமறைந்திருப்பதற்குத் தேவையான ஆதாரங்களும் கிடைத்துள்ளன.
இந்தக் கோவில்கள் தவிர மேலும் பலகோவில்கள் இப்பகுதியில் மறைந்திருக்கலாம் என தெரிகிறது. இருப்பினும் கடல்நீருக்கடியில் அகழ்வாராய்ச்சி செய்தால்தான் இவற்றை உறுதி செய்ய முடியும். ஆனால் அதற்கான கருவிகள் எங்களிடம் இல்லை.
பல்லவர் கால துறைமுக நகராக மாமல்லபுரம் விளங்கியது. இந்தப் பகுதியில் இன்னும் ஏராளமான சிற்பங்கள், கோவில்கள்,நகர்கள் புதைந்து கிடப்பதாக கருதுகிறோம். தொடர்ந்து ஆய்வுகள் செய்வதன் மூலம் இவற்றை படிப்படியாக வெளியே கொண்டுவர முடியும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications