ஜெயலட்சுமி விவகாரம்: இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
ஜெயலட்சுமி குடும்பத்தினர் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக சிவகாசி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வெள்ளையன் பணிஇடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஜெயலட்சுமியின் குடும்பத்தினரை சிவகாசி போலீஸார் கடத்திச் சென்ற வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வந்தனர். இந்தவிசாரணை முடிந்து சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில் சிவகாசி டவுன் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வெள்ளையனின் பெயர் இடம் பெற்றிருந்தது. இதைத் தொடர்ந்து அவரைபணி இடை நீக்கம் செய்து மதுரை சரக டிஐஜி பிரிஜ் கிஷோர் ரவி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications