வீராணம்: மறுபரிசீலனை செய்ய ராமதாஸ் கோரிக்கை
சென்னை:
புதிய வீராணம் திட்டத்தை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கைவிடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், புதிய வீராணம் திட்டத்தை தொடர்ந்து மேற்கொள்ளலாம் என உயர்நீதிமன்றம்அனுமதி அளித்துள்ளது. இருப்பினும், பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளின் நலனைக் கருதி, இத்திட்டத்தை தமிழகஅரசுமறுபரிசீலனை செய்ய வேண்டும்..
தமிழக அரசின் நீர்வளத்துறை நிபுணர்களின் ஆலோசனையைக் கேட்ட பிறகே இத்திட்டத்தை அமல்படுத்துவதாக முதல்வர்ஜெயலலிதா கூறுவது வேடிக்கையாக உள்ளது. தமிழக அரசு இத்திட்டம் குறித்து கொள்கை முடிவு எடுத்து விட்ட பின்னர்நிபுணர்களிடம் ஆலோசனை கேட்டுள்ளது..
அப்படி இருக்கையில் அரசுக்கு எதிராக எப்படி நிபுணர்கள் கருத்து கூறுவார்கள்?.
மத்திய அரசின் நீர் வளத்துறை நிபுணர்களின் கருத்துக்களையும் தமிழக அரசு கேட்டுப் பெற வேண்டும்..
நிலத்தடி நீர் இருப்பு நன்றாக உள்ள பகுதிகளில் இருக்கும் நீரை உறிஞ்சுவதை விட சென்னைக்குத் தேவையான நீரைஆந்திராவிடமிருந்து கேட்டுப் பெற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, காவிரி நீரிலும் நமது பங்கைவலியுறுத்திப் பெற வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்..