For Daily Alerts
Just In
4 மீனவர்களை பிடித்துச் சென்ற இலங்கை கடற்படை
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பனைச் சேர்ந்த நான்கு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
பாம்பன் பகுதியைச் சேர்ந்த முருகேசன், சுப்ரமணியன், கண்ணன் உள்ளிட் 4 பேர் படகு ஒன்றில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.தலைமன்னார் பகுதியில் அவர்கள் சென்றபோது நடுக் கடலில் அவர்களை கடற்படையினர் வளைத்துப் பிடித்தனர்.
அவர்கள் நான்கு பேருடனும், 2 சிங்களத் தீவிரவாதிகளும் உடனிருந்ததாக கூறப்படுகிறது. அவர்களை போலீஸார் வசம்இலங்கைக் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.
நான்கு மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் பிடித்துச் சென்றுள்ளதால் ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளில் பரபரப்புநிலவுகிறது.
Comments
Story first published: Sunday, April 3, 2005, 5:30 [IST]