For Quick Alerts
For Daily Alerts
Just In
பிகாரில் ஓடும் ரயிலில் தீ: கீழே குதித்த பயணிகள்
பாட்னா:
ஹெளரா நோக்கி சென்று கொண்டிருந்த தூபான் எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று காலை தீப் பிடித்துக் கொண்டது. இதையடுத்து ஓடும் ரயிலில்இருந்து பயணிகள் கீழே குதித்தனர்.
விறுவிறுவென 5 பெட்டிகளுக்கு தீ பரவியது. தராவ்லி-தில்தார் ரயில் நிலையங்களுக்கு இடையே இந்த விபத்து ஏற்பட்டது.
ரயிலில் தீப் பிடித்தவுடன் அச்சமடைந்த பயணிகள் ஓடும் ரயிலில் இருந்து குதித்தனர். இதில் பலர் பலியாகிவிட்டதாக வந்த தகவல்களைபோலீசார் மறுத்துள்ளனர்.
Comments
Story first published: Monday, April 4, 2005, 5:30 [IST]