2வது ஒரு நாள் போட்டி: இந்தியா வெற்றி
விசாகப்பட்டினம்:
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2வது ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தானை 58 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது.இந்தப் போட்டியில் விக்கெட் கீப்பர் தோனி அதிரடியாக ஆடி சதமடித்தார்.
இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கொச்சியில் நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா 87 ரன்கள்வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந் நிலையில் 2வது ஒரு நாள் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்றது.
டாசில் வெற்றி பெற்ற கங்குலி பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக ஷேவாக்கும், டெண்டுல்கரும்களமிறங்கினர். வழக்கம் போல ஷேவாக் இன்றும் அதிரடியாக ஆடினார். டெண்டுல்கர் 2 ரன்கள் எடுத்திருந்த போது ரன்அவுட்டானார்.
இதன் பிறகு ஷேவாக்குடன் விக்கெட் கீப்பர் தோனி ஜோடி சேர்ந்தார். அவரது ஆட்டம் ஷேவாக்கின் ஆட்டத்திற்கு போட்டிபோடுவது போல அதிரடியாக இருந்தது.
அபாரமாக ஆடி சதமடித்த தோனி, 123 பந்துகளில் 148 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஷேவாக் 40 பந்துகளில் 74 ரன்கள்எடுத்தார். திராவிட் 52 ரன்களில் ஆட்டமிழந்தார். கங்குலி வழக்கம் போல மோசமாக ஆடி ஆட்டமிழந்தார்.
50 ஓவர்கள் முடிவில் இந்தியா 356 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 298 ரன்களில் அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்தியா 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் தரப்பில் அப்துர் ரசாக் அதிரடியாக ஆடி 88 பந்துகளில் 93 ரன்கள் குவித்தார். யூசுப் யுகானா 56 பந்துகளில் 71 ரன்கள்எடுத்தார். மற்ற வீரர்கள் யாருமே சிறப்பாக ஆடவில்லை.
இந்த வெற்றியின் மூலம் 6 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.












Click it and Unblock the Notifications