For Daily Alerts
Just In
5 ஆண்டுகளில் 5.6 கோடி பேருக்கு வேலை: கலாம்
டெல்லி:
அடுத்த 5 ஆண்டுகளில் 5.6 கோடி பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு வழங்க முடியும் என்று குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்கூறினார்.
இந்தியாவில் வருவாய் மற்றும் உறுதியான வேலைவாய்ப்பு என்ற பொருளில் டில்லியில் கருத்தரங்கம் நடந்தது. இதில் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் கலந்து கொண்டார்.
அத்துடன் இதனை பயிரிடும் பணியிலும், அதிலிருந்து எரிபொருளை பிரித்தெடுக்கும் பணியிலும் 1 கோடியே 20 லட்சம்பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
இதேபோல, மழை நீர் சேகரிப்புத் திட்டம், மூங்கில் தொடர்பான பொருட்களின் உற்பத்தியை அதிகரித்தல் மூலமும், நாட்டின்பொருளாதாரத் துறையில் முக்கிய பங்காற்றும் ஜவுளித்துறை மற்றும் மருத்துவத் துறைகளின் மூலமும் பல ஆயிரம் பேருக்குவேலை வாய்ப்பு கிடைக்கும்.
மொத்தம் 5.6 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றார்.
Comments
Story first published: Thursday, April 7, 2005, 5:30 [IST]