கல்வி அறிவு இல்லாத வட மாவட்டங்கள்: ஜி.கே.மணி வருத்தம்
சென்னை:
தமிழகத்தின் வட பகுதி மாவட்டங்களில் மிகவும் குறைந்த அளவில் கல்வி அறிவு விகிதம் உள்ளதால், சமூக பொருளாதார ரீதியில்அந்தப் பகுதிகளில் ஏற்றத் தாழ்வு கானப்படுவதாக பாமக தலைவர்ஜி.கே.மணி கூறியுள்ளார்.
இதனால் கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களைப் பார்த்து நான் பொறாமைப்படுவதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.உண்மையில் பெருமைப்படுகிறேன். ஆனால் வட மாவட்டங்களில் கல்வி அறிவு விகிதம் மிகக் குறைவாக இருப்பது உண்மை.இதை மாற்ற தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தென் மாவட்டங்கள், சமூக ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் நன்கு முன்னேறியுள்ளன. ஆனால் வட மாவட்டங்களில்வறட்சிதான் முதலிடம் வகிக்கிறது. ஒரே மாநிலத்தில் இப்படிப்பட்ட வித்தியாசம், பாரபட்சம் காணப்படுவது மோசமானதாகும்என்றார்.
அப்போது குறுக்கிட்ட கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தான் சார்ந்துள்ள கட்சி நிரம்பியுள்ள, ஜாதியினரின்அனுதாபத்தைப் பெற மணி முயற்சிப்பாகத் தெரிகிறது என்றார்.












Click it and Unblock the Notifications