அண்ணா பெயரில் புதிய தமிழ் விருது
சென்னை:
முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பெயரில் ரூ. 10 லட்சம் ரொக்கப் பரிசைக் கொண்ட அண்ணா விருதையும், முதலமைச்சர்அறிவியல் தமிழ் விருதையும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
சர்வதேச தமிழ்க் கழகத்தின் சார்பில் அண்ணா விருது வழங்கப்படும். இதன்படி ரூ. 10 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்வழங்கப்படும். சர்வதேச அளவில் தமிழ் மொழிக்கு சிறந்த சேவை ஆற்றுவோருக்கு இந்த விருது வழங்கப்படும்.
இதேபோல, முதலமைச்சர் அறிவியல் தமிழ் என்ற புதிய விருதும் அறிவிக்கப்படுகிறது. இதன்படி, கம்ப்யூட்டர்களில்பயன்படுத்தக் கூடிய சிறந்த தமிழ் சாப்ட்வேரை உருவாக்குவோருக்கு இந்த விருது வழங்கப்படும்.
மேலும், தமிழுக்காக சிறந்த சேவையாற்றும் நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் தமிழ்த் தாய்விருது வழங்கப்படும்.
தமிழ் இலக்கியவாதிகளான மாயூரம் வேதநாயகம் பிள்ளை, சக்தி வை கோவிந்தன், தொ.பொ. மீனாட்சி சுந்தரம்,டி.என்.குமாரசாமி ஆகியோரின் நூல்கள் நாட்டுடமையாக்கப்படுகின்றன.
இதைத் தொடர்ந்து அவர்களது வாரிசுகளுக்கு ரூ. 5 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்றார் அமைச்சர் சண்முகம்.












Click it and Unblock the Notifications