For Daily Alerts
Just In
தமிழகம்: மழைக்கு இதுவரை 30 பேர் பலி
சென்னை:
தமிழகத்தில் கன மழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.
அதே போல தஞ்சாவூரில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். வீட்டில் சுவர் இடிந்து விழுந்ததில் 3 வயது குழந்தை பலியானது. மேலும்அம் மாவட்டத்தில் கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் கன மழையால் கடலில் மூழ்கி பலியானார்.
தஞ்சாவூரில் ஒரு கட்டடம் இடிந்ததில் 2 தொழிலாளர்கள் பலியாகிவிட்டனர்.
இதைத் தவிர திருப்பூரில் திடீர் வெள்ளத்தில் ஒருவர் அடித்துச் செல்லப்பட்டார்.
மொத்தத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 3ம் தேதி முதலே தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.இதனால் பல ஊர்களில் கண்மாய்கள் உடைந்துள்ளன. ஏரிகள் நிறைந்து வயல் வெளிகளில நீர் புகுந்துள்ளது.
Comments
Story first published: Saturday, April 9, 2005, 5:30 [IST]