என் கணவன் ஒரு திருந்தாத ஜென்மம்: மனைவி
சென்னை:
ராதாகிருஷ்ணனின் செக்ஸ் லீலைகளால் வெறுத்துப் போய் அவரிடம் இருந்து பிரிந்து போய்விட்ட மனைவி கோமளவல்லியிடமும்போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
எனக்கும் ராதாகிருஷ்ணனுக்கும் 1984ல் திருமணம் நடந்தது. நான் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணியாற்றுகிறேன். என் கணவரின்தவறுகளை நான் எதிர்த்தேன். இதனால் இருவருக்கும் சண்டை மூண்டது. அவரது தவறுகளை சகிக்க முடியாமல் பிரிந்து போய்விட்டேன்.விவாகரத்து கோரியும் வழக்குப் போட்டேன்.
என் மகனும் மகளும் என்னுடன் வசித்தாலும் சூளைமேட்டில் உள்ள கணவரின் வீட்டுக்கும் போவார்கள். கடந்த பிப்ரவரி மாதம் என் மகன்இரவு அங்கு சென்று தங்கினான். அப்போது தான் ஆனந்தி என்ற சிறுமியை எனது கணவர் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.
அவளை படுக்கையில் என் கணவருடன் பார்த்துவிட்ட என் மகன் எனக்கு போன் செய்தான். நான் உடனே அங்கு ஓடி அந்த சிறுமியை மீட்டுபோலீசாருக்கு தகவல் தந்தேன். அவர்கள் குழந்தைகள் நல மையத்தினருடன் வந்து அவளை மீட்டுச் சென்றனர்.
அவர்கள் வந்து அழைத்துச் சென்றனர். என் கணவர் ஒரு திருந்தாத ஜென்மம். அவர் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியுள்ள கோமளவல்லியின் தந்தை ஒரு போலீஸ் அதிகாகியாவார்.
அதே போல ராதாகிருஷ்ணனின் அப்பா, தம்பியும் கூட போலீஸ்காரர்கள் தானாம்.