For Daily Alerts
Just In
தூக்கத் திருவிழா: குழந்தையுடன் தொங்கியபடி..
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பத்ரேஸ்வரி அம்மன் கோவிலில் இன்று தூக்கத் திருவிழா நடைபெற்றது. இதில்ஏராளமான பக்தர்கள் தங்களது குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.
பத்ரேஸ்வரி அம்மன் கோவிவிலில் வருடந்தோறும் பங்குனி மாத இறுதியில் தூக்கத் திருவிழா நடைபெறும்.
இந்த தூக்கத் திருவிழா, கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு சில கோவில்களில் மட்டுமே நடத்தப்படுகிறது.
இன்று நடைபெற்ற திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தங்களது குழந்தைகளுடன் கலந்து கொண்டார்கள்.
ஏராளமானவர்கள் தங்களது குழந்தையுடன் மரத்தினாலான தூணில் தொங்கியபடி தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.
Comments
Story first published: Monday, April 11, 2005, 5:30 [IST]