விருதுநகர்: பஸ்-வேன் மோதலில் 9 பேர் பலி
விருதுநகர்:
விருதுநகர் அருகே அரசு பஸ்சும் வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 9 பேர் அந்த இடத்திலேயே பலியாயினர்.
விருதுநகர் அருகே உள்ள துலுக்கப்பட்டியைத் தாண்டி பட்டாம்புதூர் விலக்கு பகுதியில் இந்த பஸ்சும் வேனும் பயங்கர வேகத்தில்நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இதில் வேனில் இருந்த 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர்.
விபத்துக்குள்ளான வேன் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தது. அதில் இருந்தவர்கள் கர்நாடகத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள்என்று தெரிகிறது.
இந்த விபத்தில் வேன் உருக்குலைந்து போனது. இதில் வேனில் இருந்த 9 பேரும் உடல் நசுங்கி பலியாகிவிட்டனர். மேலும் 10பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் பலியான கர்நாடகத்தைச் சேர்ந்தவர்களின் ஊர், பெயர் விவரம் உடனடியாகத் தெரியவில்லை.