புலிகள் திடீர் தாக்குதல்: கருணா ஆதரவாளர்கள் 9 பேர் பலி
கொழும்பு:
இலங்கையில் ராணுவத்தின் உதவியோடு செயல்பட்டு வந்த கருணா மற்றும் ஈஎன்டிஎல்ப் முகாம்கள் மீது விடுதலைப் புலிகள் திடீர்தாக்குதல் நடத்தினர். இதில் கருணா ஆதரவாளர்கள், ஈஎன்டிஎல்ப் படையினரில் 9 பேர் கொல்லப்பட்டனர்.
சமீபகாலமாக இப் பகுதியில் கருணா ஆதரவாளர்களும் ஈஎன்டிஎல்எப்பும் ராணுவத்தின் உதவியுடன் முகாம்கள் அமைத்து செயல்பட்டுவந்தனர்.
இப் பகுதியில் புலிகள் மீது இவர்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வந்தனர். இலங்கை ராணுவத்தின் உதவியுடன் அவர்கள் தாக்குதல் நடத்திவருவதாக நார்வே அமைதிக் குழுவும் குற்றம் சாட்டியுள்ளது.
இந் நிலையில் வன்னத்துறையடி என்ற இடத்தில் உள்ள 3 முகாம்களை புலிகள் திடீரெனத் தாக்கினர்.
இதில் ஈஎன்டிஎல்எப்பைச் சேர்ந்த விஜயன் உள்ளிட்ட 9 பேர் கொல்லப்பட்டதாக மட்டக்களப்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள்தெரிவிக்கின்றன. இந்த விஜயன் சமீபகாலமாக தென் இந்தியாவில் நடமாடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications