தமிழகத்தில் 4 வழி சாலைகளாகும் 1,200 கி.மீ. நீள சாலைகள்
டெல்லி:
தமிழ்நாட்டில் 1200 கி.மீ. தூரத்திற்கு பத்து தேசிய நெடுஞ்சாலைகள் நான்கு வழிச்சாலைகளாக (4 லேன்) மாற்றப்பட உள்ளதாக மத்தியஅமைச்சர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
திண்டிவனம்-திருச்சி, புதுவை-திண்டிவனம், திருவனந்தபுரம்-கன்னியாகுமரி, பாண்டிச்சேரி-திண்டிவனம், திருச்சி-கரூர் (திருச்சிபுறவழிச்சாலை உட்பட), நாகப்பட்டினம்-தஞ்சாவூர்-திருச்சி, மதுரை-தூத்துக்குடி, சேலம்-உளுந்தூர்பேட்டை,
திருப்பதி-திருத்தணி-சென்னை, கிருஷ்ணகிரி-திண்டிவனம் ஆகிய சாலைகள் இதில் அடங்கும்.
தங்க நாற்கரச் சாலைத்திட்டத்தின் கீழ், மும்பை-சென்னையை இணைக்கும் 1,290 கி.மீ. திட்டத்தில் 1,037 கி.மீ. தூரத்திற்கு பணிகள்முடிடைந்து விட்டன. இந்த ஆண்டு இறுதிக்குள் 94 சதவீதம் பணிகள் முடிவைடந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை-கொல்கத்தா இடையிலான 1,684 கி.மீ. தொலைவுள்ள சாலையில் 1381 கி.மீ.தொலைவுக்கு பணிகள் முடிவடைந்து விட்டன.வடகிழக்கு மாநிலங்களுக்கென ரூ.12,000 கோடியில் 7,600 கி.மீ.தொலைவுக்கு சாலைகள் அமைக்க சிறப்புத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
துறைமுகங்களை இணைக்கும் எக்ஸ்பிரஸ் வழித்திட்டத்தின் கீழ், சென்னை போர் நினைவுச் சின்ன வாயிலில் இருந்து மதுரவாயல் வரைரூ.77 கோடி மதிப்பில் எக்ஸ்பிரஸ் வழித்தடம் அமைக்கப்படும் என்றார் டி.ஆர்.பாலு.