கிரிக்கெட்: கைதட்டி ரசித்து பார்த்த முஷாரப்
டெல்லி:
இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அதிபர் முஷாரப் டெல்லியில் இந்தியா-பாகிஸ்தான் மோதும் கிரிக்கெட் போட்டியை கை தட்டிரசித்து பார்த்தார். அவருடன் பிரதமர் மன்மோகன் சிங்கும் போட்டியை பார்த்தார்.
இஸ்லாமாபாத்திலிருந்து தனது மனைவி ஷேபாவுடன் நேற்று பிற்பகலில் புறப்பட்ட முஷாரப், ஜெய்ப்பூர் வந்தார். அங்கிருந்துஹெலிகாப்டர் மூலம் அஜ்மீர் சென்ற இருவரும் காஜா மொய்னுத்தீன் கிஸ்தி தர்காவில் பிரார்த்தனை செய்தனர்.
இதன் பிறகு ஜெய்ப்பூரில் இருந்து புறப்பட்ட இருவரும் மாலையில் டெல்லி வந்தனர். நேற்று இரவு டெல்லி தாஜ் ஹோட்டலில்தங்கினர்.
இன்று காலை டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்திற்கு கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்காக முஷாரப்பும், அவரதுமனைவியும் வந்தனர். பிரதமர் மன்மோகன் சிங்கும் போட்டியை பார்க்க வந்தார். ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாக இருஅணி வீரர்களும் முஷாரப் மற்றும் மன்மோகன் சிங்கிற்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
ஆட்டம் தொடங்கியதும் பாகிஸ்தான் வீரர்கள் பேட்டிங் செய்வதை முஷாரப் கை தட்டி மிகவும் ஆர்வத்துடன் ரசித்துப் பார்த்தார்.
மேலும் இப்போட்டியை வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் பலதலைவர்களும் பார்த்தனர்.