புதிய போப் தேர்தல்: நாளை துவங்குகிறது
வாடிகன்:
புதிய போப் ஆண்டவருக்கான தேர்தல் நாளை தொடங்குகிறது.
இதனைத் தொடர்ந்து புதிய போப் ஆண்டவரை தேர்ந்தெடுக்க உலகம் முழுவதும் உள்ள கர்தினால்கள் வாடிகனுக்கு வந்துள்ளனர்.இவர்கள் ஒன்றாக கூடி ஆலோசனை நடத்தி தங்களுக்குள் ஒருவரை புதிய போப்பாக தேர்வு செய்வார்கள்.
இதற்கான தேர்தல் நாளை தொடங்குகிறது. இதுவரையில் புதிய போப் யார் என்பது பற்றி கர்தினால்கள் இடையே ஒருமித்தகருத்து ஏற்படவில்லை.
இதனால் நாளை தேர்தலுக்கான முதல் கட்ட நடவடிக்கை தொடங்குகிறது. இதற்காக வாடிகன் தேவாலயத்தில் உள்ள ரகசியஅறையில் அனைத்து கர்தினால்களும் கூடி ஆலோசனை நடத்துவார்கள்.
தற்போதய நிலவரப்படி இந்தியாவை சேர்ந்த இவான் டயஸ் உட்பட 10 பேருக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
117 கர்தினால்களும் தாங்கள் தேர்ந்தெடுக்க விரும்புபவரின் பெயரை ஒரு சீட்டில் குறிப்பிடுவார்கள். இதன்படி 80கர்தினால்களின் ஆதரவைப் பெறுபவர்கள் புதிய போப்பாக அறிவிக்கப்படுவார்.
தேர்வு முடிந்ததும் புதிய போப் ஆண்டவர் விசேஷ உடையணிந்து தேவாலயத்திலுள்ள பால்கனிக்கு வந்து நின்று மக்களுக்கு ஆசிவழங்குவார்.