புதிய வீராணம் திட்டம்: 29ம் தேதி விவசாயிகள் சாலை மறியல்
பெரம்பலூர்:
புதிய வீராணம் திட்டத்தைக் கைவிடக் கோரி பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள், திருமானூரில் வருகிற 29ம் தேதி சாலை மறியல்செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
புதிய வீராணம் திட்டம் என்றபெயரில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா சில மாதங்களுக்கு முன்புதொடங்கி வைத்தார். இந்த நிலையில் வருகிற 29ம் தேதி திருமானூரில் இத்திட்டப் பணிகள் தொடங்கப்படவுள்ளன.
புதிய வீராணம் திட்டத்திற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள், 29ம் தேதிதிருமானூரில் கூடி மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
இந்தப் போராட்டத்திற்கு தமிழக விவசாயிகள் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. புதிய வீராணம் திட்டத்தை தமிழக அரசு கைவிடவேண்டும் என்று கோரி இந்தப் போராட்டம் நடத்தப்படுவதாக சங்கத்தின் மாவட்டத் தலைவர் செல்லத்துரை தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இதே திருமானூரில் சில நாட்களுக்கு முன்பு விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications