இடைத் தேர்தலில் தனித்துப் போட்டி: திருமாவளவன்
மதுரை:
காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் தனித்துப்போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் திருமாவளவன் கூறியுள்ளார்.
பாப்பாபட்டி பஞ்சாயத்துத் தேர்தலில் எங்களது வேட்பாளர் நரசிங்கம் மர்மமான முறையில் மரணமடைந்தது அதிர்ச்சியடையவைத்துள்ளது. அவரது சாவில் மர்மம் உள்ளது. இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். இதை வலியுறுத்தி வருகிற 25ம்தேதி மாவட்டத் தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்படும்.
நரசிங்கம் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நஷ்ட ஈடும், ஒரு ஏக்கர் நிலமும் தமிழக அரசு வழங்க வேண்டும். பாப்பாபட்டி தேர்தலில்புதிய வேட்பாளரை விடுதலைச் சிறுத்தைகள் நிறுத்தும்.
பாமகவுடன் தமிழ் பாதுகாப்பு இயக்கத்தில் நாங்கள் ஒருங்கிணைந்து செயல்படுகிறோம். அதற்காக அரசியலிலும் அவர்களுடன்சேர்ந்து செயல்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றார் திருமாவளவன்.