For Daily Alerts
Just In
திமுகவைக் கண்டித்து சாலை மறியல்: அமைச்சர் வளர்மதி கைது
சென்னை:
சென்னையில் திமுகவினர் நடத்திய சாலை மறியலைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட அமைச்சர் வளர்மதிகைது செய்யப்பட்டார்.
சென்னை மாநகராட்சி வார்டில் இன்று இடைத் தேர்தல் நடைபெற்றது. இதில் பல இடங்களில் வன்முறை ஏற்பட்டது.திமுகவினரும், அதிமுகவினரும் மோதலில் ஈடுபட்டனர்.
திமுகவினரின் இந்த சாலை மறியலால் சென்னையில் இன்று பரபரப்பு ஏற்பட்டது.
இந் நிலையில் திமுகவினர் மறியலில் ஈடுபட்டதால் ஆவேசமடைந்த அமைச்சர் வளர்மதியும் தனதுஆதரவாளர்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டார்.
இதுகுறித்து அறிந்த போலீஸார் அங்கு விரைந்து வந்து அமைச்சர் வளர்மதியை கைது செய்தனர்.
Comments
Story first published: Tuesday, April 19, 2005, 5:30 [IST]