ராதாகிருஷ்ணன்: சிறுமிகளுக்கு மருத்துவப் பரிசோதனை
சென்னை:
காம வெறியன் ராதாகிருஷ்ணனால் சீரழிக்கப்பட்ட 3 சிறுமிகளுக்கு சென்னை அரசு பொது மருத்துவமனையில் மருத்துவப்பரிசோதனை செய்யப்பட்டது. ராதாகிருஷ்ணனுக்கும் ஆண்மைப் பரிசோதனை நடத்தப்பட்டது.
சிறுமிகளை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கி சீரழித்ததாக கைது செய்யப்பட்டுள்ள சுங்கத்துறை இன்ஸ்பெக்டர்ராதாகிருஷ்ணனுக்கு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆண்மைப் பரிசோதனை நடத்தப்பட்டது.
முன்னதாக ராதாகிருஷ்ணனால் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வாணியம்பாடியைச் சேர்ந்த பிரேமா, ஆனந்தி,வேண்டா ஆகிய 3 சிறுமிகளும் அரசு பொதுமருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
ஆனால் சட்டம் சார்ந்த மருத்துவ இயல் பிரிவில் பெண் மருத்துவர்கள் இல்லாததால், வெறும் வயது சான்றிதழ் மட்டும்வழங்கப்பட்டது.
பின்னர் 3 சிறுமிகளும் அரசு கஸ்தூரிபா காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவப்பரிசோதனைகள் நடத்தப்பட்டன.












Click it and Unblock the Notifications