தேர்தல் வன்முறை: உயர்நீதிமன்றத்தில் திமுக முறையீடு
சென்னை:
சென்னை மாநகராட்சி வார்டு இடைத் தேர்தலில் நடந்த வன்முறை தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் திமுக வேட்பாளர் ராமமூர்த்திமுறையீடு செய்துள்ளார்.
சென்னையில் இன்று காலை தொடங்கிய 110 மற்றும் 131வது வார்டுகளுக்கான இடைத் தேர்தல் வாக்குப் பதிவின்போது பெரும்வன்முறை வெடித்தது. திமுகவினரும், அதிமுகவினரும் மாறி மாறி மோதலில் ஈடுபட்டனர்.
நீதிபதிகள் கற்பகவிநாயகம், நாகப்பன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு ஆஜரான வழக்கறிஞர் விடுதலை, 131வது வார்டுதேர்தலில் அதிமுகவினர் பெருமளவில் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு சில வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் ஓட்டுப் போட முடியாமல் விரட்டப்பட்டுள்ளனர். வேட்பாளர் உள்ளிட்ட பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
இவற்றை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இதுதொடர்பாக அரசு வழக்கறிஞர்ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் உத்தரவிட்டனர்.