சேது சமுத்திரம்: விரைவில் தொடங்கி வைக்கிறார் பிரதமர்
சென்னை:
சேது சமுத்திரத் திட்டத்தை விரைவில் பிரதமர் மன்மோகன் சிங், தூத்துக்குடியில் தொடங்கி வைக்கவுள்ளதாக தெரிகிறது.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலிருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை கிடப்பில் போடப்பட்டிருந்த சேது சமுத்திரத்திட்டத்தை செயல்படுத்த காங்கிரஸ் கூட்டணி அரசு முடிவுசெய்து, இதற்காக ரூ. 2000 கோடி நிதியையும் ஒதுக்குவதாகஅறிவித்தது.
மத்திய அமைச்சரவை ஒப்புதல் கிடைத்தவுடன் திட்டத்தை தொடங்கி வைத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் குறித்த ஜூரம் அதிகமாகியிருப்பதால், தேர்தலுக்கு முன்பாகவே இந்தத் திட்டத்தை தொடங்கிவிட மத்திய அரசு தீவிரமாக உள்ளது.
விரைவில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் என்றும் அதைத் தொடர்ந்து தூத்துக்குடியில் நடைபெறும் விழாவில்இத்திட்டத்தை பிரமதர் மன்மோகன் சிங் தொடங்கி வைப்பார் என்றும் கூறப்படுகிறது.