For Daily Alerts
Just In
சென்னை மாநகராட்சி தேர்தலில் அதிமுக வெற்றி
சென்னை:
சென்னை மாநகராட்சியின் 2 வார்டுகளிலும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.
நேற்று நடைபெற்ற இந்த தேர்தலில் சென்னையில் பெரும் கலவரம் வெடித்தது. திமுக எம்.எல்.ஏ.க்களும் அமைச்சர்களும் சாலைமறியலில் ஈடுபட்டனர். கள்ள ஓட்டுப் போட்டதாக இரு கட்சியினருமே மாறிமாறி குற்றம் சாட்டினார்கள்.
இதனால் இந்த தேர்தலை திமுக புறக்கணிக்கப்பதாக ஸ்டாலின் அறிவித்தார்.
இந் நிலையில் இன்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. இதில் சென்னை மாநகராட்சியின் இரு வார்டுகளிலும்அதிமுகவைச் சேர்ந்த முகில் வண்ணன் மற்றும் பாஸ்கர் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Story first published: Wednesday, April 20, 2005, 5:30 [IST]