இடமாற்றம், நிதி ஒதுக்கீடுக்கு தேர்தல் ஆணையம் தடை
சென்னை:
தமிழகத்தில் சட்டசபை இடைத் தேர்தல் நடைபெறவிருப்பதால் மானிய நிதி ஒதுக்கீடு,இடமாற்றம், புதிய திட்டங்களை அறிவித்தல், மக்களுக்கு உறுதி மொழி அளித்தல்போன்றவை அறிவிக்கப்படக் கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், காஞ்சிபுரம் எஸ்.பி. பிரேம்குமார் திடீரென இடமாற்றம்செய்யப்பட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நடக்கும் நேரத்தில்பிரேம்குமார் மாற்றப்பட்டது சரியல்ல என்று பேச்சு கிளம்பியது. ஆனால், தேர்தல்ஆணையத்தின் அனுமதியைப் பெற்றே பிரேம்குமார் மாற்றப்பட்டார் என்றுகூறப்படுகிறது.
இருப்பினும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை தமிழக அரசு முழுமையாககடைப்பிடிக்க வேண்டும் என்று மீண்டும் ஒரு முறை தேர்தல் ஆணையம்வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில்,
மானிய நிதி ஒதுக்கீடு, இடமாற்றங்கள், புதிய அறிவிப்புகளை வெளியிடுதல், குடிநீர்ப்பிரச்சினை போன்றவை தொடர்பாக மக்களுக்கு உறுதிமொழி வழங்கும் வகையிலானஅறிவிப்புகள் போன்றவற்றை தமிழக அரசு கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
எம்.பி., எம்.எல்.ஏ. தொகுதி நிதியை பயன்படுத்தவும் தடை விதிக்கப்படுகிறது. இந்தத்திட்டங்களின் படி நடந்து கொண்டிருக்கும் பணிகளையும் உடனடியாக நிறுத்தவேண்டும் என்றும் தேர்தல்ஆணையம் தெரிவித்துள்ளது.