மகன் மாயம்: ஆண்டித் தேவரிடம் சிபிஐ விசாரணை
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மகன் காணாமல் போனது தொடர்பாக எம்.எல்.ஏ. ஆண்டித் தேவர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் சிபிஐ அதிகாரிகள் இன்றுவிசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் சிவராமனின் தாய் மாமன் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அதில் சிவராமனைஅவரது தந்தை ஆண்டித் தேவரே கொன்றிருக்கக் கூடும். எனவே இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க அவர் கோரியிருந்தார்.
இதையடுத்து விசாரணையை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 2 வாரங்களாகஇன்ஸ்பெக்டர் அருளானந்தம் தலைமையிலான சிபிஐ குழுவினர் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளார்கள்.
இன்று ஆண்டித் தேவர், அவரது மனைவி, இளைய மகன் ஆகியோரை மதுரைக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர்.












Click it and Unblock the Notifications