மகன் மாயம்: ஆண்டித் தேவரிடம் சிபிஐ விசாரணை

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மகன் காணாமல் போனது தொடர்பாக எம்.எல்.ஏ. ஆண்டித் தேவர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் சிபிஐ அதிகாரிகள் இன்றுவிசாரணை நடத்தினர்.

உசிலம்பட்டி எம்.எல்.ஏ. ஆண்டித் தேவரின் மூத்த மகன் சிவராமன், கடந்த 1998ம் ஆண்டு காணாமல் போய் விட்டார். முதலில்இந்த வழக்கை மதுரை திடீர் நகர் போலீஸார் விசாரித்து வந்தனர். பின்னர் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இருப்பினும்துப்பு ஏதும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் சிவராமனின் தாய் மாமன் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அதில் சிவராமனைஅவரது தந்தை ஆண்டித் தேவரே கொன்றிருக்கக் கூடும். எனவே இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க அவர் கோரியிருந்தார்.

இதையடுத்து விசாரணையை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 2 வாரங்களாகஇன்ஸ்பெக்டர் அருளானந்தம் தலைமையிலான சிபிஐ குழுவினர் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளார்கள்.

இன்று ஆண்டித் தேவர், அவரது மனைவி, இளைய மகன் ஆகியோரை மதுரைக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+