For Daily Alerts
Just In
சிதம்பரத்தை கண்டித்து கம்யூ. விவசாயிகள் நடைபயணம்
சிவகங்கை:
சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும், மத்திய நிதியமைச்சர்ப.சிதம்பரத்தைக் கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயிகள் பிரிவு சார்பில் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், வங்கியை மீண்டும் திறக்க வலியுறுத்தியும், இதுதொடர்பாக அவசரப்பட்டு நடவடிக்கை எடுத்ததற்காகப.சிதம்பரத்தைக் கண்டித்தும், சிவகங்கை மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயிகள் பிரிவு சார்பில் நடைபயணம்மேற்கொள்ளப்பட்டது.
கட்டமங்கலம் கிராமத்திலிருந்து தொடங்கிய இந்த நடைபயணம் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக திருப்பத்தூரைஅடைந்தது. அங்கு ஆர்ப்பாட்டத்திலும் விவசாயிகள் ஈடுபட்டனர்.
Comments
Story first published: Thursday, April 21, 2005, 5:30 [IST]