மிலாடி நபி, மகாவீர் ஜெயந்தி: ஜெ. வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மகாவீர் ஜெயந்தி மற்றும் மிலாடி நபியையொட்டி முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
மிலாடி நபி தொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், அகில உலகத்தவர்களுக்கும் பொதுவான வேதம் நபிகள்நாயகத்தால் அருளப்பட்டது. நபிகள் போதித்த சாந்தி, சமாதானம், சகோதரத்துவம் ஆகியவை இன்றைய உலகின்இன்றியமையாத தேவைகளாக உள்ளன.
மகாவீர் ஜெயந்தியையொட்டி அவர் விடுத்துள்ள மற்றொரு வாழ்த்து செய்தியில், அறத்தின் சமயம் சமணம், அதன் நாயகர்மகாவீரர். அறத்தின் அடிப்படை கொல்லாமை. அகிம்சை நெறியே அகிலத்தின் கொள்கையாக கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
மகாவீரர் வழியில் அகிம்சையைக் கடைப்பிடித்தால் வன்முறையின் கோரப் பிடியிலிருந்து உலகம் விடுபடும். மகாவீரரின்தத்துவத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications