ஜெயேந்திரர் மீது புது வழக்கு: உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி கோவிலில் இருந்த சிவன் சன்னதியை வெடி வைத்துத் தகர்த்து அகற்றியது தொடர்பாகஜெயேந்திரர் உள்ளிட்டோர் மீது வழக்குத் தொடர போலீஸுக்கு உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டுள்ளது.

திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவிலில் இருந்த சிவன் சன்னதியை ஜெயேந்திரர் தூண்டுதலின் பேரில்அப்புறப்படுத்தியதால், அதைக் கண்டித்த அர்ச்சகர் மாதவன் சென்னையில் வைத்துத் தாக்கப்பட்டார். இதுதொடர்பாகஜெயேந்திரர் மீது ஏற்கனவே ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த கிருஷ்ணாச்சாரியார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில்,திருக்குறுங்குடி கோவிலில் இருந்த சிவன் சன்னதி ஜெயேந்திரர் ஆலோசனையின் பேரில் அகற்றப்பட்டது. அப்போது சிவன்சிலையை வெடி வைத்துத் தகர்த்து அகற்றியுள்ளனர்.

இதுதொடர்பாக ஜெயேந்திரர் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு கூறி சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் அதைஏற்றுப் பதிவு செய்ய போலீஸார் மறுத்து விட்டனர்.

எனவே ஜெயேந்திரர் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி கே.பி.சிவசுப்ரமணியம், மனுதாரரின் புகாரை ஏற்று போலீஸார் வழக்குப் பதிவு செய்யமறுத்தது கண்டனத்துக்குரியது என்று கூறி இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். வழக்குவிசாரணை 25ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+