அவதூறு வழக்கு: செங்கை கோர்ட்டில் ஸ்டாலின் ஆஜர்

Subscribe to Oneindia Tamil

செங்கல்பட்டு:

முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் திமுக துணைப் பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலின் செங்கல்பட்டுசெஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

கடந்த 2004ம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி பூந்தமல்லியை அடுத்த ஆண்டர்சன் பேட்டையில் நடந்த புரட்சி பாரதம் தலைவர் பூவைமூர்த்தியின் சிலை திறப்பு விழா, 24ம் தேதி பள்ளிப்பட்டில் நடந்த திமுக பொதுக் கூட்டம், மே 8ம் தேதி நடந்த நாடாளுமன்றதேர்தல் பிரசார விழா ஆகியவற்றில் ஸ்டாலின் பேசினார்.

அப்போது முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாகப் பேசியதாக கூறி ஸ்டாலின் மீது செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றத்தில்அரசு வழக்கறிஞர் ஆறுமுகம் அவதூறு வழக்கைத் தொடர்ந்தார்.

நீதிபதி அக்பர் அலி முன்னிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டாலின் நீதிபதி முன்புஆஜரானார். பின்னர் இந்த வழக்கை ஜூன் 28ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.

பின்னர் வெளியே வந்த ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஊராட்சி இடைத் தேர்தலில் வன்முறை, கள்ள ஓட்டு மூலம்அதிமுகவினர் வெற்றி பெற்று வருகிறார்கள்.

இது மாநில அரசின் கட்டுப்பாட்டில் நடக்கும் தேர்தல் என்பதால் அவர்கள் நினைத்தபடி நடத்த முடியும். ஆனால் நாடாளுமன்றத்தேர்தல், சட்டசபைத் தேர்தல் ஆகியவை மத்திய தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் நடக்கக் கூடியவை. அங்குஆளுங்கட்சியினர் நினைத்தபடி காரியம் சாதிக்க முடியாது என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+