For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அறவழி ஆயுதம் ஏந்துவோம்: கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தேர்தலின்போது வன்முறையில் ஈடுபடும் தமிழக அமைச்சர்களுக்கு எதிராக திமுகவினர் அறவழி ஆயுதம் ஏந்தத் தயங்கக்கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் இன்று அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், உள்ளாட்சித் தேர்தலின்போது அமைச்சர்களேசாலையில் அமர்ந்து மறியல் செய்தும், கலகம் செய்தும் அமைதிக்குப் பங்கம் விளைவித்துள்ளார்கள். இதை உயர்நீதிமன்றம்கண்டித்துள்ளது.

இதேபோன்ற கலகமும், மறியலும், வன்முறையும் சட்டசபை இடைத் தேர்தலிலும் அரங்கேறக் கூடும். இவற்றை எதிர்த்துதிமுகவினரும், தோழமைக் கட்சியினரும் அறவழி ஆயுதம் ஏந்துவதில் எந்தத் தவறும் இல்லை.

இடைத் தேர்தலில் திமுக பெறும் வெற்றி, திமுக அணியினர், எதிர் வரும் சட்டசபை பொதுத் தேர்தலை சந்திப்பதற்கு ஊக்கமாகஅமையும். கூட்டணியை பலப்படுத்தும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X