For Quick Alerts
For Daily Alerts
Just In
2 தொகுதிகளிலும் திமுகவுக்கே வெற்றி: வைகோ
விழுப்புரம்:
காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத் தேர்தலில் திமுகவே வெற்றி பெறும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
விழுப்புரத்தில் நடந்த மாவட்ட மதிமுக ஆய்வுப் பணி கூட்டத்தில் கலந்து கொண்ட வைகோ பின்னர் செய்தியாளர்களிடம்பேசுகையில், திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி மிகவும் வலுவானதாக இருக்கிறது. எனவே இந்தஇரண்டு தொகுதிகளிலும் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அமோக வெற்றி பெறுவார்கள்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று நான்தான் முதலில் சொன்னேன்.இப்போதும்சொல்கிறேன். இந்த இரு தொகுதிகளிலும் திமுகதான் வெற்றி பெறும் என்றார் வைகோ.
Story first published: Friday, April 22, 2005, 5:30 [IST]