செஞ்சி அருகே விபத்து: வெள்ளையன் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை:
செஞ்சி அருகே நடந்த விபத்தில் வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் படுகாயமடைந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் நேற்று வணிகர் சங்க விழா நடந்தது. இதில் வணிகர் சங்க தலைவர் வெள்ளையன்கலந்து கொண்டார். இரவில் விழா முடிந்த பிறகு அவர் ஒரு டெம்போ வேனில் சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
இதில் வேனில் இருந்த வெள்ளையனுக்கு படுகாயம் ஏற்பட்டது. அவரது இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாகஅவர் செஞ்சி அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதன் பிறகு வேறு வாகனத்தில் வெள்ளையன் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விபத்து குறித்து செஞ்சி போலீஸார்வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications