தேர்தல் பணிகளில் அதிமுக சுறுசுறுப்பு!
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டி சட்டசபைத் தொகுதிகளில் அதிமுக தனது தேர்தல் பணிகளை சுறுசுறுப்பாக ஆரம்பித்துள்ளது.
இரு தொகுதிகளிலும் வருகிற மே 14 ம் தேதி இடைத் தேர்தல் நடக்கவுள்ளது. இரு தொகுதகிளிலும் திமுகவும், அதிமுகவும்நேரடியாக மோதுகின்றன. அதிமுக சார்பில் காஞ்சிபுரத்தில் மைதிலி திருநாவுக்கரசும், திமுக சார்பில் பி.எம்.குமாரும்போட்டியிடுகிறார்கள். கும்மிடிப்பூண்டியில் அதிமுக சார்பில் விஜயக்குமாரும், திமுக சார்பில் வெங்கடாச்சலபதியும் களத்தில்நிற்கிறார்கள்.
சுவர்களைப் பிடித்து வைத்து அதில் வேட்பாளரின் பெயரை எழுதும் பணிகள் தொகுதிகளில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.காஞ்சிபுரத்தில் அதிமுக தேர்தல் அலுவலகம் பரபரப்பான காந்தி சாலையில் நேற்று திறக்கப்பட்டது. கட்சியின் பொருளாளர்திண்டுக்கல் சீனிவாசன் அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.
தேர்தல் அலுவலகத்தில் கணபதி ஹோம், நவக்கிரஹ ஹோமம், சுதர்சன ஹோமம், லட்சுமி ஹோமம் உள்ளிட்டவையும்நடத்தப்பட்டன.
அதிமுக வேட்பாளரின் வெற்றிக்காக 11 அமைச்சர்கள் காஞ்சிபுரத்தில் முகாமிட்டுள்ளனர். இவர்கள் தவிர 4 வாரியத்தலைவர்களும், ஏராளமான எம்.எல்.ஏக்களும் இங்கு குவிந்துள்ளனர்.
அமைச்சர்கள் நைனார் நாகேந்திரன், நத்தம் விஸ்வநாதன், அண்ணாவி, வைத்தியலிங்கம், இன்பத்தமிழன், மில்லர், சோமசுந்தரம்,வேலுச்சாமி, அனிதா ராதாகிருஷ்ணன், கே.பி.அன்பழகன், ராமச்சந்திரன் ஆகியோர் தொகுதியில் முகாமிட்டுள்ளனர்.
இதுதவிர குடிசை மாற்று வாரியத் தலைவர் பாலகங்கா உள்ளிட்ட வாரியத் தலைவர்களும் இங்கு வந்துள்ளனர். வேட்பாளர்மைதிலி திருநாவுக்கரசுவை எப்படியும் வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற நோக்கில், அதிகவினர் தீவிரமாக செயல்பட்டுவருகின்றனர்.












Click it and Unblock the Notifications