சென்னை வருகிறார் அத்வானி
சென்னை:
சென்னையில் வருகிற 30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள பாஜக பிரதிநிதிகள் மாநாட்டை கட்சித் தலைவர்அத்வானி துவக்கி வைத்து, கட்சியின் சட்டமன்றத் தேர்தல் நிலைப்பாடு குறித்து அறிவிக்கவுள்ளார்.
இதுகுறித்து கட்சியின் அகில இந்தியச் செயலாளர் இல.கணேசன் கூறுகையில், தமிழக பஞ்சாயத்து அளவிலான கட்சிப்பிரதிநிதிகள் மாநாடு ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டின்போது 2006ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் பாஜக மேற்கொள்ளப் போகும்நிலை குறித்து வெளிப்படையாக அத்வானி அறிவிக்கவுள்ளார்.
மே 14ம் தேதி நடைபெறவுள்ள இடைத் தேர்தலைப் பொருத்தவரை நாங்கள் திமுகவுக்கோ அல்லது அதிமுகவுக்கோ ஆதரவுதெரிவிக்கப் போவதில்லை. எங்களது ஆதரவைக் கேட்டு எந்தக் கட்சியும் எங்களை அணுகவில்லை. இடைத் தேர்தலில் எங்களதுசக்தியை வீணடிக்க நாங்கள் விரும்பவில்லை.
மக்கள் விரோத திட்டங்களை தொடர்ந்து அதிமுக அரசு செயல்படுத்தி வருகிறது, மக்கள் விரோத நடவடிக்கைகளில் தொடர்ந்துஅது ஈடுபட்டு வருகிறது. இதனால் அரசுக்கு எதிரான மிகப் பெரிய அலை தமிழகத்தில் வீசி வருகிறது. இந்த அலை இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு எதிராக நிச்சயம் திரும்பும் என்றார் இல.கணேசன்.












Click it and Unblock the Notifications