இடைத் தேர்தல்: திமுக ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காஞ்சிபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டி இடைத் தேர்தல் பிரசாரப் பணிகளை ஒருங்கிணைத்து செயல்படுவதற்காக 2ஒருங்கிணைப்புக் குழுக்களை திமுக அமைத்துள்ளது.
கும்மிடிப்பூண்டி தேர்தல் பணிகளை கவனித்துக் கொள்ள ஆற்காடு வீராசாமி, வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோரைஒருங்கிணைப்பாளர்களாகக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் கோ.சி.மணி உள்ளிட்ட 11 பேர் இடம்பெற்றுள்ளனர்.
இதற்கிடையே, காஞ்சிபுரம் திமுக வேட்பாளர் பி.எம்.குமாரும், கும்மிடிப்பூண்டி வேட்பாளர் வெங்கடாசலபதியும் திமுக தலைவர்கருணாநிதியை அறிவாலயத்தில் சந்தித்து ஆசி பெற்றனர். துணைப் பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலினையும் அவர்கள் சந்தித்துசால்வை போர்த்தி ஆசி பெற்றனர்.












Click it and Unblock the Notifications