நுழைவுத் தேர்வு தொடங்கியது
சென்னை:
அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் மருத்துவம் மற்றும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு இன்றுதொடங்கியது.
நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் கடந்த பிப்ரவரி 25ம் தேதி முதல் ஏப்ரல் 1ம் தேதி வரை விநியோகிக்கப்பட்டுபெறப்பட்டன. மொத்தம் 1,67,877 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் 41 இடங்களில் மொத்தம் 295 மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது.
நுழைவுத் தேர்வுகள் முடிந்ததும், விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்ட பின் மதிப்பெண் சான்றிதழ் தபால் மூலம்மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
மதிப்பெண் சான்றிதழ் தொலைந்து போனால், ரூ.250க்கான வரைவோலையுடன் அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள தமிழ்நாடுதொழில் படிப்பு பொது நுழைவுத்தேர்வுகள் செயலருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முடிவுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும். தங்களது விடைத்தாள்கள் திருத்தப்பட்டது குறித்து மாணவர்களுக்குசந்தேகம் ஏற்பட்டால் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்.












Click it and Unblock the Notifications