அமெரிக்கப் பெண்ணை மணந்த மதுரை வாலிபர்
மதுரை:
மதுரையைச் சேர்ந்த ஒருவர், தன்னை விட 10 வயது மூத்த அமெரிக்கப் பெண்ணை மணந்துள்ளார்.
மதுரை மேலமாசி வீதியை சேர்ந்தவர் ராம்நாத் பாலசுப்பிரமணியன்(வயது 41). இவர் சுற்றுலாப்பயணிகளுக்குவழிகாட்டியாகவும், ஜெர்மன் மொழி பெயர்ப்பாளராகவும் இருந்து வருகிறார்.
திருமணமாகாத இவர், தனக்கு மணப்பெண் தேவை என்று இன்டர்நெட்டில் விளம்பரம் கொடுத்துள்ளார். இதைப் பார்த்தஅமெரிக்காவிலுள்ள தென் கரோலினா மாகாணத்தை சேர்ந்த பார்பரா என்ற 51 வயது பெண்ணுக்கு ராம்நாத்தை திருமணம் செய்யஆவல் ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து இ மெயில் மூலம் இருவரும் தங்களது எண்ணங்களை பரிமாறிக் கொண்டனர்.
இருவரும் மதுரை பத்திரப்பதிவு அலுவலகத்தில் நண்பர்கள் முன்னிலையில் மாலை மாற்றி, மோதிரம் மாற்றி, தாலி கட்டிதங்களது இரு கலாச்சார முறைப்பஐ திருமணம் செய்து கொண்டனர்.
பார்பராவுக்கு ஏற்கனவே திருமணமாகி 3 மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தனது முதல் கணவரைவிவாகரத்து செய்து விட்டார்.