மீனாட்சி கோவில் தேரோட்டம்: இன்று நடந்தது
மதுரை:
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடந்தது. இதில் வெளிநாட்டினர் உட்படபல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவின்முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நேற்று கோலாகலமாக நடந்தது.
இதைத் தொடர்ந்து இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நடந்தது. இன்று அதிகாலை 5.15 மணியளவில்அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளினர். தொடர்ந்து பூஜைகள் நடைபெற்றன.
காலை 6.15 மணியளவில் சுந்தரேஸ்வரர்-பிரியாவிடை எழுந்தருளியுள்ள தேர் நிலையை விட்டு கிளம்பியது. இந்துஅறநிலையத்துறை அமைச்சர் ராமசாமி தேரை வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதில் கலெக்டர் ராஜேந்திரன், மீனாட்சி அம்மன் அறங்காவலர் குழு தலைவர் கருமுத்து கண்ணன், நிர்வாக அதிகாரி பாஸ்கரன்,தென்மண்டல ஐ.ஜி.திரிபாதி, மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமார் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
சுவாமி தேர் கிளம்பிய 30 நிமிடங்கள் கழித்து மீனாட்சி அம்மன் தேர் கிளம்பியது. இந்த தேர் 4 மாசி வீதிகளையும் வலம் வந்து10.30 மணியளவில் நிலையத்தை அடைந்தது.
தேர் திருவிழாவை காண தமிழகம் முழவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிந்திருந்தனர்.தேரோட்டத்தில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டினரும் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.












Click it and Unblock the Notifications