இடைத் தேர்தல்: வேட்பு மனு தாக்கல் நாளை முடிகிறது
சென்னை:
காஞ்சிபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டி சட்டசபை இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளையுடன் முடிவடைகிறது.
காஞ்சிபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டி இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த18ம் தேதி தொடங்கியது. 22ம் தேதிஅதிமுக வேட்பாளர்களான மைதிலி (காஞ்சிபுரம்), விஜயக்குமார் (கும்மிடிப்பூண்டி) ஆகியோர் தங்களது வேட்பு மனுக்களைத்தாக்கல் செய்தனர்.
இதேபோல கும்மிடிப்பூண்டியில் அதிமுக வேட்பாளர் விஜயக்குமார், ஒய்.எம்.கிருஷ்ணன் (மாற்று வேட்பாளர்), பத்மராஜன்,வெங்கடேசன், நடராஜன் உள்ளிட்ட 5 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாகும். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. கடைசி நாளான நாளை திமுக வேட்பாளர்களான பி.எம்.குமார் (காஞ்சிபுரம்), வெங்கடாசலபதி(கும்மிடிப்பூண்டி) ஆகியோர் தங்களது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்கின்றனர்.
செவ்வாய்க்கிழமை வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுக்களை வாபஸ் பெற விரும்புவோர்வியாழக்கிழமைக்குள் வாபஸ் பெறலாம். அன்றே போட்டியில் உள்ளவர்களின் இறுதிப் பட்டியல் தெரிய வரும். மே 14ம் தேதிவாக்குப் பதிவு நடைபெறுகிறது.