கடவுளை நம்புகிறவர்கள் பயப்பட தேவையில்லை- புதிய போப் வாழ்த்து செய்தி
வாடிகன்:
கடவுளிடத்தில் நம்பிக்கை வைப்பதின் மூலம் நாம் எதையும் இழக்கப் போவதில்லை என்று நேற்று பதவி ஏற்ற புதிய போப்ஆண்டவர் 16ம் பெனடிக்ட் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.
போப் இரண்டாம் ஜான் பால் மரணமடைந்ததையொட்டி புதிய போப் ஆண்டவராக ஜெர்மனியை சேர்ந்த ஜோசப் ரட்ஸிங்கர்தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிய போப் இனி முதல் 16ம் பெனடிக்ட் என்று அழைக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது.
புதிய போப் ஆண்டவரை கர்தினால்கள் ஊர்வலமாக அழைத்து வந்தனர். ஏசுநாதரின் முதலாவது சீடரும், புனிதருமான பீட்டரின்(பேதுரு) உருவம் பொறித்த மீனவர் மோதிரத்தையும், சிவப்பு நிற சின்னங்கள் பொறிக்கப்பட்ட வட்ட வடிவ கம்பளி துண்டையும்கர்தினால் ஜார்ஜ் ஆர்துரோ மெதினா எஸ்தீவஸ் அவருக்கு அணிவித்தார்.
இதன்பின் போப் ஆண்டவர் பதவிக்குரிய திருச்சின்னமான கோலும் அவருக்கு தரப்பட்டது. தொடர்ந்து அவர் அங்கு கூடியிருந்தலட்சக்கணக்கான மக்களை ஆசிர்வதித்தார்.
பதவி ஏற்பு நிகழ்ச்சியைக் காண உலகம் முழுவதிலும் இருந்து 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வாடிகனில் குவிந்திருந்தனர்.அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் சகோதரரும், கவர்னருமான ஜெப் புஷ், ஜெர்மனி அதிபர் ஹோர்ஸ்ட் கோஹ்லர் பிரதமர்ஜெரார்ட் ஷூரோடர் உட்பட பல முக்கிய தலைவர்கள் இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
சுமார் 2 மணிநேரம் திருப்பலி நிகழ்ச்சி நடந்தது. இதன்பிறகு போப் 16ம் பெனடிக்ட் வாழ்த்து செய்தி அளிக்கையில்,கடவுளிடத்தில் நம்பிக்கை வைப்பதின் மூலம் நாம் எதையும் இழக்கப் போவதில்லை. அந்த நம்பிக்கை தான் நமது வாழ்க்கையைசுதந்திரமானதாக, அற்புதமானதாக மகோன்னதம் மிக்கதாக மாற்றுகிறது என்று குறிப்பிட்டார்.