For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழ் பத்திரிகைகள் மீது ராமதாஸ் கடும் பாய்ச்சல்

By Staff
Google Oneindia Tamil News

கும்பகோணம்:

தமிழ் பத்திரிகைகளில் 60 சதவீதத்திற்கும் மேலாக ஆங்கிலம் மற்றும் பிற மொழி வார்த்தைகள் தான் பயன்படுத்தப்படுகின்றன.இந்த "சண்டாளர்கள் நமக்கு அறிவுரை கூற என்ன தகுதி உள்ளது என்று பத்திரிக்கைகள் மீது பாமக நிறுவனர் ராமதாஸ் மீண்டும்தனது காட்டத்தைக் காட்டியுள்ளார்.

முதலில் ரஜினிகாந்த், பின்னர் விஜயகாந்த், அதன் பிறகு தமிழ்த் திரையுலகம் என பாய்ந்து வரும் டாக்டர் ராமதாஸ்,அவ்வப்போது பத்திரிக்கையாளர்களிடம் தனது ஆத்திரத்தை வெளிப்படுத்துவார்.

முன்பு தினமலர் நாளிதழை மிகக் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அந்த நாளிதழை வன்னியர்கள் புறக்கணிக்க வேண்டும்என்று வட மாவட்டங்களில் பாமகவினர் போஸ்டர்கள் ஒட்டினர்.

இந்த நிலையில் மீண்டும் ஒருமுறை பத்திரிகைகள் மீது அவர் பாய்ந்துள்ளார். கும்பகோணத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் அவர்பேசுகையில், தமிழ்ப் பத்திரிக்கைகள் தமிழுக்கு எதிராக செயல்படுகின்றன.

நாளேடுகளை மட்டும் கூறவில்லை அவை வாரமலர்களாக (தினமலரை மறைமுகமாகக் குறிப்பிட்டு) இருந்தாலும் சரி,பத்திரிக்கைகளை எடுத்துப் பார்த்தால், அதில் 100 வார்த்தைகளில் 60 வார்த்தைகள் ஆங்கிலத்திலோ அல்லது பிற மொழியிலோதான் உள்ளன.

அந்த சண்டாளர்களைக் கேட்கிறேன். நேருக்கு நேர் பேச வாருங்கள். ஆனால் ஒருத்தரும் வர மாட்டேன் என்கிறார்கள். எவ்வளவுகொழுப்பு இருக்க வேண்டும் அவர்களுக்கு? எவ்வளவு நெஞ்சழுத்தம் இருக்க வேண்டும் அவர்களுக்கு?

தமிழில் எழுத முடியாத இவர்கள் எப்படி நமக்கு கட்டளையிடலாம்? இவர்கள் யார் நமக்கு ஆணையிட, அறிவுரை கூற என்றுராமதாஸ் பேசியதால், கூட்டத்திற்கு வந்திருந்த செய்தியாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி எழுந்தது.

இருந்தும் "தொண்டர் கூட்டம் காரணமாக, அதை வெளிப்படையாகக் காட்ட முடியாமல், ராமதாஸ் பேச்சு முழுவதையும்கவனித்தபடி அமர்ந்திருந்தனர் செய்தியாளர்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X