தலைமை தேர்தல் கமிஷனராக டாண்டன் நியமனம்
டெல்லி:
தலைமை தேர்தல் கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி ஓய்வு பெறுவதால் புதிய கமிஷனராக டாண்டன் இன்று நியமிக்கப்பட்டார்.
தற்போது தலைமை தேர்தல் கமிஷனராக உள்ள தமிழ்நாட்டை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியின் பதவிக் காலம் மே 16ம் தேதியுடன்முடிவடைகிறது. இவர் ஓய்வு பெறுவதால் தற்போது தேர்தல் கமிஷன் உறுப்பினராக இருக்கும் டாண்டன், புதிய தலைமை தேர்தல்கமிஷனராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான அதிகாரபூர்வான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. கிருஷ்ணமூர்த்தி ஓய்வு பெறும் மே 16ம் தேதி அன்றேடாண்டன் பதவி ஏற்பார்.
64 வயதான ஐஏஎஸ் அதிகாரி டாண்டன், 2001ம் ஆண்டு தேர்தல் கமிஷன் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அடுத்த ஆண்டுஜூன் மாதம் வரை இவர் தலைமை தேர்தல் கமிஷனராக இருப்பார்.
இவர் தேர்தல் கமிஷனில் உறுப்பினராக நியமிக்கப்படுவதற்கு முன் மத்திய அரசின் ஊழியர் நலத்துறை செயலாளராக இருந்தார்.இமாச்சல பிரதேசத்திலும், அந்தமானிலும் பல உயர் பதவிகளில் இவர் பணியாற்றி உள்ளார்.












Click it and Unblock the Notifications