For Daily Alerts
Just In
இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை
சென்னை:
காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்தவர்களின் மனுக்கள் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
சட்டசபை இடைத் தேர்தல் நடைபெறவுள்ள இந்த இரண்டு தொகுதிகளிலும் வேட்பு மனு தாக்கல் திங்கள்கிழமை மாலை 3மணியுடன் முடிவடைந்தது. காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் மைதிலி திருநாவுக்கரசு, திமுக சார்பில் பி.எம்.குமார், விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் இளஞ்செழியன்,
இவர்களது மனுக்கள் இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. சுயேச்சைகள் சிலரின் மனுக்கள் தள்ளுபடியாகும் எனஎதிர்பார்க்கப்படுகிறது. சரியான ஆவணங்கள், சொத்து விவரங்கள் இணைக்கப்படாத மனுக்கள் தள்ளுபடியாகி விடும்.
மனுக்களை வாபஸ் பெற நாளை முதல் 2 நாட்களுக்கு அவகாசம் அளிக்கப்படுகிறது. 28ம் தேதி வேட்பாளர் இறுதிப் பட்டியல்தயாராகி விடும்.
Comments
Story first published: Tuesday, April 26, 2005, 5:30 [IST]