10 அமைச்சர்களுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை:
சென்னை மாநகராட்சி இடைத் தேர்தலின்போது சாலை மறியலில் ஈடுபட்ட 10 அமைச்சர்களும் பதவியில் நீடிப்பதை எதிர்த்துசென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
கடந்த 19ம் தேதி சென்னை மாநகராட்சியின் 2 வார்டுகளுக்கு இடைத் தேர்தல் நடந்தது. அப்போது திமுகவினர் சாலை மறியல்போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்குப் போட்டியாக அமைச்சர்களும் சாலை மறியலில் குதித்தனர்.
இந்த நிலையில் சின்னச்சாமி என்ற வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், அதிமுக சார்பில்நடத்தப்பட்ட போராட்டத்தில் அமைச்சர்கள் பொன்னையன், ஜெயக்குமார், கருப்பசாமி,
மில்லர், வளர்மதி, அனிதா ராதாகிருஷ்ணன், கே.பி.அன்பழகன், ராதாகிருஷ்ணன், வைத்தியலிங்கம், ராமச்சந்திரன் ஆகியோர்கலந்து கொண்டு சாலை மறியல் செய்துள்ளனர்.
அமைச்சர்களாக பதவியேற்றபோது எடுத்துக் கொண்ட பதவிப்பிரமாணத்திற்கு எதிரானது இது.
எனவே எந்த அடிப்படையில் அவர்கள் அமைச்சர்களாக நீடிக்கிறார்கள், தொடருகிறார்கள் என்பதை நீதிமன்றம் கேட்கவேண்டும் என்று கோரியிருந்தார் சின்னச்சாமி.
இதற்கிடையே, இடைத் தேர்தல் வன்முறை தொடர்பான வழக்கில் தங்களைக் கைது செய்தால் ஜாமீனில் விட உத்தரவிடக் கோரிதி.நகர் எம்.எல்.ஏ. உள்ளிட்ட 9 திமுகவினர் முன் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்துள்ளனர்.
இடைத் தேர்தல் வன்முறை தொடர்பாக மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட திமுகவினர் மீது வழக்குத்தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில் தி.நகர் எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன், கவுன்சிலர்கள் சுப்ரமணியம், தனசேகரன் உள்ளிட்ட 9திமுகவினர் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீது இன்று விசாரணை நடைபெறுகிறது.