ராஜீவ் கொலை வழக்கில் கைதானவர்கள் இலங்கை செல்ல அனுமதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ராஜீவ் காந்தி மற்றும் பத்மநாபா ஆகியோரைக் கொன்ற வழக்கில் கைதாகி, பின்னர் விடுதலை செய்யப்பட்டு, அகதிகள்முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள வசந்தகுமார் மற்றும் லிங்கம் ஆகியோர் இலங்கை செல்ல அனுமதித்து சென்னைஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1991ம் ஆண்டு சென்னைக்கு வந்தார் வசந்தகுமார். ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் பத்மநாபா கொலை வழக்கில் வசந்தகுமார் கைது செய்யப்பட்டார். இவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால், 1997ம் ஆண்டு அவர் விடுதலை செய்யப்பட்டார்.

அதன் பின்னர் வெளிநாட்டினர் குடியுரிமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வசந்தகுமார் சிறப்பு அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டார்.

அதேபோல, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் லிங்கம் கைது செய்யப்பட்டிருந்தார். இவருக்கும், கொலைக்கும் தொடர்பில்லைஎன்று தெரியவந்ததைத் தொடர்ந்து சாட்சியாக சேர்க்கப்பட்டார். இருவரும் தங்களை இலங்கை திரும்ப அனுமதிக்கக் கோரிஉயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த மனுக்களை நீதிபதிகள் கற்பகவிநாயகம், நாகப்பன் ஆகியோர் விசாரித்தனர். மனுதாரர்கள் உள்ளிட்ட 9 பேர் மீது ஜெயின்கமிஷன் அறிக்கை தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தியது.

விசாரணைக்குப் பின்னர் மனுதாரர்களைத் தவிர மற்ற 7 பேரும் இலங்கை சென்று விட்டனர்.

இதுவரை உள்ள ஆவணங்களைப் பார்க்கும்போது மனுதாரர்களுக்கு எதிராக எதுவும் இல்லை என்பது தெரிகிறது. எனவேஇவர்களை முகாமில் வைத்திருக்கும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இருவரும் இலங்கை திரும்ப அனுமதிக்க வேண்டும்என்று உத்தரவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+